-யாழ் நிருபர்-
யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சூரிய பண்டாரவின் கீழ் இயங்கும் யாழ்ப்பாண மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய, யாழ்ப்பாண மாவட்ட குற்றதடுப்பு பிரிவினரும் இணைந்து வட்டுகோட்டை பொலிஸ் பிரிவில் சுழிபுரம் மத்தி பரளாய் வீதி பகுதியில் உள்ள வீடு ஒன்று சுற்றி வளைத்தனர்.
இதன்போது 47 வயதுடைய பெண் ஒருவர் கசிப்புடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண் தொடர்ச்சியாக கசிப்பு வியாபாரம் செய்வதாக ஊர் மக்கள் விசனம் தெரிவித்த நிலையில், இன்று யாழ்ப்பாணம் மாவட்ட குற்றதடுப்பு பிரிவினரும், யாழ்ப்பாணம் மாவட்ட புலனாய்வு பிரிவினரும் இணைந்து குறித்த பெண்ணை 10 போத்தல் கசிப்புடன் கைது செய்தனர்.
குறித்த பெண் வட்டுகோட்டை பொலிஸ் நிலையத்தில் பாரப்படுத்தப்பட்டார்.
இவர் இதற்கு முன்னரும் கசிப்புடன் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பொலிஸார் மேலதிக விசாரணைகளின் பின்னர் அவரை மல்லாகம் நீதிமன்றில் முற்படுத்தவுள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்