பிரதமர் மோடி ஆழ்கடலுக்கு சென்று துவாரகாவில் வழிபாடு : வைரலான வீடியோ இணைப்பு

இந்திய – குஜராத் மாநிலத்தில் அரபிக்கடலில் மூழ்கிய துவாரகாவில் பிரதமர் மோடி மயில் இறகுடன் சிறப்பு பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார்.

பகவான் கிருஷ்ணருக்கு நெருக்கமான இந்த இடத்தில் பிரதமர் மோடி ஆழ்கடலில் ஓட்சிசனின் உதவியோடு கடற்படையினரின் சூழியோடிகளின் கடலின் தரைப்பகுதிக்கு சென்று மயிலிறகை வைத்து சிறப்பு பூஜை செய்து வழிப்பட்டார்.

இந்த வழிபாடு தெய்வீக அனுபவமாக இருந்தது என பிரதமர் மோடி மனம் உருகியுள்ளார். இந்தியாவின் ஏராளமான ஆன்மிக தலங்கள் உள்ளன. இதில் மிகவும் முக்கியமான ஒரு இடம் தான் துவாரகா. குஜராத் மாநிலத்தில் அரபிக்கடலில் அமைந்த நகரம் இதுவாகும். இந்த துவாரகா பகுதிக்கும் பகவான் கிருஷ்ணருக்கும் வலுவான ஒரு தொடர்பு இருப்பதாக நம்பப்படுகிறது.

யதுகுல அரசர்கள் ஆண்ட ஆனர்த்த நாட்டின் தலைநகராக துவராகா இருந்ததாகவும், அதனை கிருஷ்ணன்தான் உருவாக்கியதாகவும் நம்பப்படுகிறது. மேலும் இந்த துவாரகா காலப்போக்கில் அரபிக்கடலுக்குள் மூழ்கியுள்ளதாக வரலாற்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கடலுக்குள் துவாரகா நகரம் மூழ்கியது தொடர்பாக பல்வேறு தொல்பொருள் ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன. அந்த ஆய்வுகளில் அரபிக்கடலில் நீருக்கடியில் பழங்கால நகரம் மூழ்கியதற்கான எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் துவாரகை இந்துக்களின் புனித நகரங்களில் ஒன்றாக இருந்து வருகிறது.

இந்நிலையில் தான் பிரதமர் மோடி 2 நாள் பயணமாக தனது சொந்த மாநிலமான குஜராத்துக்கு வருகைதந்திருந்த நிலையில் பிரதமர் மோடி துவாரகா நகர் மூழ்கியதாக கூறப்படும் இடத்துக்கு சென்று பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார்.

ஸ்கூபா டைவிங் வீரர்கள் உதவியுடன் படகில் அரபிக்கடலுக்குள் பிரதமர் மோடி காவி உடையுடன் கிருஷ்ணருக்கு பிடித்த மயிலிறகுடன் மோடி ‛ஸ்கூபா டைவிங்’ கருவிகளை உடலில் பொருத்தி கடலுக்குள் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார்.

பிரதமர் மோடி மற்றும் ஸ்கூபா டைவிங் வீரர்கள் ஆழ்கடலின் தரைப்பகுதிக்குள் சென்ற மயிலிறகை தரையில் வைத்து சிறப்பு பூஜை செய்தார். அதன்பிறகு தரைப்பகுதியை தொட்டு வணங்கிய பிரதமர் மோடி கடலில் இருந்து வெளியே வந்துள்ளார்.