பதவி உயர்வு பெற்று செல்லும் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கௌரவிப்பு

யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளராக பதவி உயர்வு பெற்று செல்லவுள்ளார்.

இந்நிலையில் இவருக்கான பிரியாவிடை நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை நண்பகல் யாழ். மாவட்ட செலயலகத்தின் கேட்போர் கூடத்தில், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன் தலைமையில் நடைபெற்றது.

திரு.கணபதிப்பிள்ளை மகேசன் பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் கீழ் உள்ள மட்டக்கிளப்பு மாவட்ட செயலா ளராகவும், வெளிநாட்டு விவகார அமைச்சின் திணைக்கள பணிப்பாளராகவும் கடமையாற்றி தற்போது யாழ். மாவட்ட அரசாங்க அதிபராக கடமையாற்றியமை குறிப்பிடத்தக்கது.