எதிர்காலத்தில் பொதுப் போக்குவரத்தை முற்றிலும் இலவசமாக்கி, தனியார் வாகனங்களின் பயன்பாட்டைக் குறைப்பதே அரசாங்கத்தின் இலக்காகும் என போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க இன்று புதன்கிழமை நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
எனினும், தற்போதைய பொருளாதாரச் சூழலில் இந்த இலக்கை உடனடியாக அடைவது சாத்தியமில்லை என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.