நாளை சாதாரணதர பரீட்சைக்கு தோற்ற முடியாமல் போன மாணவன்

மாத்தறையில் கடந்த 25 ஆம் திகதி மாணவன் மீது கடுமையாக தாக்கிய பிக்கு கைது செய்யப்பட்டுள்ளார்.

வெலிகம பிரதேசத்தில் பாடசாலையில் கல்வி கற்கும்  சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவிருக்கும் மாணவனே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

இவ்வருடம் சாதாரண பரீட்சைக்குத் தோற்றவிருந்த குறித்த மாணவன் கடந்த 25 ஆம் திகதி பரீட்சை அனுமதி சீட்டில் கையொப்பமிடவுள்ளதாகவும் பின்னர் மேலதிக வகுப்பிலும் பங்கேற்கவுள்ளதாகவும் அந்த மாணவன் கூறிச் சென்றுள்ளான்.

ஆனால் மேலதிக வகுப்பு நடைபெறாததால், தனது தோழியுடன் அப்பகுதியில் உள்ள விகாரைக்கு சென்றுள்ளார்.அங்கு குறித்த விகாரையின் விகாராதிபதி மாணவனையும் அவருடன் சென்ற தோழியையும் ஈர்க்குமாறால் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது தாக்குதலுக்கு உள்ளான மாணவன் மாத்தறை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை நாளை திங்கட்கிழமை தொடங்கவுள்ள சாதாரண தர பரீட்சைக்கு அந்த மாணவனால் தோற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்