நாளைய போராட்டத்திற்கு இ.தொ.க. ஆதரவு

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார பிரச்சினைக்கு எதிராக நாளை வியாழக்கிழமை   நாடு தழுவிய ரீதியில்  முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்திற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்  தனது ஆதரவை தெரிவித்துள்ளது.

தொழிற்சங்க ஒருங்கிணைப்பு மத்திய நிலைய உறுப்பினர்களுடன் சௌமியபவனில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே, இ.தொ.கா தனது ஆதரவை வழங்கியுள்ளது.

அத்துடன்,குறித்த போராட்டத்தின் போது, நாடளாவிய ரீதியில்  இ.தொ.கா தமது  அதிருப்தியை அரசாங்கத்துக்கு தெரிவிக்கும் வகையில், 300 இடங்களில், போராட்டங்களை ஏற்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.