நகருக்குள் புகுந்த காட்டு யானைகள்

தம்புள்ளை நகருக்குள் தற்செயலாக புகுந்த மூன்று காட்டு யானைகளை வனவிலங்கு அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புப் படையினர் விரட்டியதாக தம்புள்ளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நேற்று முன்தினம் செவ்வாய் கிழமை இரவு தம்புள்ளைக்கு வந்த மூன்று காட்டு யானைகளும் நேற்று அதிகாலையில் வீடுகள் மற்றும் கடைகளில் சுற்றித் திரிந்தன.

பின்னர், வனவிலங்கு அதிகாரிகள், தம்புள்ளை பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளின் உதவியுடன் காட்டு யானைகள் தங்கியிருந்த இடத்திலிருந்து கிராலாவ, மரகெல்ல காட்டுப்பகுதிக்கு வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்