ஹொரணை, பட்டகொட பகுதியில் அமைந்துள்ள ‘மவ்பிய செவன செனெஹசே கெதெல்ல’ காப்பகத்தில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாகக் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அதன் உரிமையாளரைப் பிணையில் விடுவிக்க ஹொரணை நீதவான் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
இருப்பினும், அவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படாத நிலையில், சந்தேகநபர் சார்பாக சட்டத்தரணிகள் முன்னிலையாகியிருந்தனர்.
அதற்கமைய, சட்டத்தரணிகளின் சமர்ப்பிப்புகளைக் கருத்தில் கொண்டு, நீதவான் ஒரு இலட்சம் ரூபா ரொக்கப் பிணை மற்றும் தலா 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளின் அடிப்படையில் சந்தேகநபரை விடுவிக்க உத்தரவிட்டுள்ளார்.
இருந்தபோதிலும், சந்தேகநபருக்கு வெளிநாட்டுப் பயணத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு மீண்டும் இம்மாதம் 25ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.