– கிண்ணியா நிருபர்-
வரலாற்று சிறப்பு மிக்க திருகோணமலை சல்லியம்பதி சல்லி முத்துமாரியம்மன் ஆலயத்தின் வருடாந்த திருவிழாவின் 09 ம் நாள் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு மிகவும் சிறப்பாக இடம் பெற்றது.
அம்பாள் திருவீதி வலம் வருவதையும் விசேட பூஜை வழிபாடு இடம் பெறுவதையும், பக்தர்கள் காவடி எடுப்பதையும், பாரம்பரிய மரபு முறைப்படி நிகழ்வுகள் இடம் பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.




