தமிழரசுக் கட்சிக்கு எதிரான வழக்குகளை விசேட சட்டத்தரணிகள் குழு கையாளும் என இலங்கை தமிழரசு கட்சியின் முன்னாள் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
அதன்படி இலங்கை தமிழரசுக் கட்சிக்கு எதிராக யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலை நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகளை கட்சியினால் நியமிக்கப்பட்ட விசேட சட்டத்தரணிகள் குழுவொன்றினூடாக கையாள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சியில் நேற்று வெள்ளிக்கிழமை கூடிய தமிழரசு கட்சியின் மத்திய குழு உறுப்பினர்கள் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளனர்.
குறித்த கலந்துரையாடலை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இலங்கை தமிழரசு கட்சியின் முன்னாள் தலைவர் மாவை சேனாதிராஜா இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.