சூரங்கல் பிரீமியர் லீக் இறுதிப் போட்டியில் பிரதம அதிதியாக எம். எஸ். தௌபீக் எம்.பி

கென்வூட் விளையாட்டுக் கழகத்தினால் நடாத்தப்பட்ட சூரங்கள் பிரீமியர் லீக் இறுதிப் போட்டி நேற்று முன் தினம் செவ்வாய்க்கிழமை கென்வூட் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக திருகோணமலை மாவட்ட  பாராளுமன்ற உறுப்பினரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளருமான எம் எஸ் தௌபீக் கலந்து சிறப்பித்தார்.

மேலும் இந்நிகழ்வில் கிண்ணியாவின் முன்னாள் நகர பிதா சட்டத்தரணி டொக்டெர். ஹில்மி மஹ்ரூப், கிண்ணியா பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் சனூஸ், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் இப்னுல்லாஹ், பாடசாலை அதிபர் பைசால் மற்றும் ஏனைய உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்