சர்வதேச தொழிலாளர் தினம்

தொழிலாளர்களின் உரிமைகளை வென்றெடுத்த நாளாக, இன்று மே தினம் அனைத்துலக ரீதியாக அனுஷ்டிக்கப்படுகின்றது.

மே தினம் ஏன் அனுஷ்டிக்கப்படுவது ஏன்?

1886ஆம் ஆண்டு மே மாதம் முதலாம் திகதி அமெரிக்காவின் சிக்காகோ நகரில் ஒன்று கூடிய தொழிலாளர்கள் வேலை நேரத்தை 8 மணித்தியாலங்களாக வரையறுக்குமாறு கோரி பணிப்பகிஷ்கரிப்புடன் ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பேராட்டத்தில் முதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இணைந்ததுடன் மூன்றாவது நாளில் அந்த எண்ணிக்கை 65,000 ஆக அதிகரித்தது.

1886ஆம் ஆண்டு மே மாதம் 3ஆம் திகதி முதலாளிமாரின் வழிநடத்தலில் ஆயுதம் தாங்கிய பொலிஸார் தொழிலாளர்கள் மீது நடத்திய தாக்குதலில் 4 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

இந்த தாக்குதலை கண்டித்து மே மாதம் 4ஆம் திகதி தொழிலாளர்கள் ஹேமார்கட் சதுக்கத்தில் அணி திரண்டனர்.

பொலிஸாருக்கும் தொழிலாளர்களுக்கும் இடையில் வாக்குவாதம் இடம் பெற்ற போது நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்தார்.

இந்தப் போராட்டம் மோதலாக உருவெடுத்ததுடன் 6 பொலிஸ் உத்தியோகத்தர்கள் பலியானதை அடுத்து அது மேலும் உக்கிரமடைந்தது. இந்த மோதலில் பலியான தொழிலாளர்களின் எண்ணிக்கையை இன்றும் உறுதியாக கூற முடியாது.

அந்த வகையில் 8 மணித்தியால கடமை நேரத்திற்காக போராடி உயிர் தியாகம் செய்தவர்களை எப்போதும் நினைவுகூர வேண்டும் என சர்வதேச தொழிலாளர் அமைப்பு 1889ஆம் ஆண்டு தீர்மானித்தது.

அதற்கமைய ஒவ்வொரு வருடமும் மே மாதம் முதலாம் திகதி சர்வதேச தொழிலாளர் தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்