குடிபோதையில் கணவரை கட்டையால் அடித்துக் கொலை செய்த மனைவி

குடிபோதையில் கணவரை கட்டையால் மனைவி துடிதுடிக்க அடித்துக் கொலை செய்த சம்பவம் இந்தியாவில் இடம்பெற்றுள்ளது

கேரளா மாநிலம் பத்தனம் திட்டாவில் வசிக்கும் ஒரு தம்பதியினரிடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு கணவன், மனைவி இருவரும் மதுபோதையில் இருந்துள்ளனர்.

அப்போது அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த மனைவி வீட்டில் இருந்த கட்டையை எடுத்து கணவர் என்று கூடபாராமல் தலையில் சரமாரியாக தாக்கியுள்ளார்.

ரத்த வெள்ளத்தில் சரிந்த கணவன் மயங்கி கீழே விழுந்தார். அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்த போது பேச்சு மூச்சு இல்லாமல் இருந்த அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தார்.

இதுகுறித்து உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து குறித்த பெண்ணை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்