கிணற்றுக்குள் பாய்ந்த முச்சக்கர வண்டி: 7 பேர் படுகாயம்

பொல்கஹவெல – ஹொதெல்ல பிரதேசத்தில் பயணித்த முச்சக்கரவண்டி இன்று செவ்வாய்க்கிழமை மாலை கிணற்றில் வீழ்ந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் காயமடைந்துள்ளனர்.

விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த தாய் , தந்தை , பாட்டி மற்றும் 4 பிள்ளைகள் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

முச்சக்கரவண்டியின் சாரதி உறங்கியதால் இந்த விபத்து இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்