இலங்கையில் மிக உயரமான மனிதன்

முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு கைவேலி பகுதியிலேயே இலங்கையில் மிகவும் உயரமான மனிதர் வசித்து வருகின்றார்.

கைவேலி பகுதியை சேர்ந்த இரண்டு பிள்ளைகளுக்கு தந்தையான குணசிங்கம் கஜேந்திரன் (வயது – 45) என்ற இவர் முச்சக்கர வண்டி ஓட்டுநராக இருக்கின்றார்.

இவர் 7 அடி 2 அங்குலம் உயரத்தினை கொண்டிருப்பதுடன் தற்போது வரையிலும் இலங்கையின் உயரமான மனிதன் என்கிற இடத்தை பிடித்துள்ளார்.

இவர் அதிக உயரமாக இருப்பதனால் முச்சக்கரவண்டிக்குள் அமர்ந்திருப்பது கூட கடினமானதாகும்.

தனது அசாதாரண உயரத்தால் எண்ணற்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடுவதாகவும் இலங்கையில் தனது கால்களின் நீளத்திற்கு ஏற்ற பாதணிகளை எடுக்க முடியவில்லை எனவும் அவற்றை வெளிநாடுகளில் இருந்து பெற்றுக்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும்

பேருந்தில் இருக்கைகள் கிடைக்காதுவிட்டால் பயணிப்பது சிரமமானது எனவும் நீண்ட தூரம் பேருந்தில் பயணிப்பதாக இருந்தால் இருக்கைக்கு முன்பதிவு செய்ய வேண்டிய கட்டாயமாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்