கனடாவில் இந்திய மாணவிக்கு நேர்ந்த சோகம்

கனடாவிற்கு மாணவர் விசாவில் சென்ற இந்திய மாணவியொருவர் நயாகரா நீர்வீழ்ச்சியில் விழுந்து உயிரிழந்துள்ளார்.

பஞ்சாப்பின் ஜலந்தர் மாவட்டத்தில் லோகியான் காஸ் நகரில் குட்டுவால் என்ற கிராமத்தில் வசித்து வந்த பூனம்தீப் கவுர் (வயது – 21) என்ற யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த யுவதி தனது நண்பர்களுடன் கனடாவில் உள்ள நயாகரா நீர்வீழ்ச்சிக்கு சென்ற நிலையில், திடீரென ஆழமுள்ள குழியில் தவறி விழுந்துள்ளார். மேலும் அவரை காப்பாற்ற பல முயற்சிகள் மேற்கொண்ட போதும் முயற்சிகள் தோல்வியடைந்துள்ளதாக கூறப்படுகின்றது.

தூதரகம் ஊடாக இந்த தகவல் பூனம்தீப்பின் குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனடாவில் இந்திய மாணவிக்கு நேர்ந்த சோகம்