கசிப்பு வேண்டாம் நல்ல மதுபானமே வேண்டும்: மதுப்பிரியர்கள் திகனையில் போராட்டம்

மதுப்பிரியர்கள் சிலர் தங்களுக்கு புதிய மதுக்கடை தேவை என்றும், தொடர்ந்து கசிப்பை (நாட்டு சாராயம்) குடிப்பதால் நோய்வாய்ப்படுவதாகவும், எனவே நல்ல மதுபானம் அருந்த வாய்ப்பளிக்க வேண்டும் எனக் கோஷமிட்டமை கண்டி திகன பகுதியில் இடம்பெற்றுள்ளது.

கண்டி திகன பகுதியில் புதிய மதுபானசாலை திறப்பு விழாவில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட கருத்து மோதலால் பதற்றமான சூழல் ஏற்பட்டது.

ஊருக்கு ஒரு மதுக்கடை போதும், இன்னொன்று தேவையற்றது என்று ஒரு பிரிவினர் இந்த திறப்பு விழாவில் கோஷமிட்டனர்.

ஆனால், அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் அந்த இடத்திற்கு வந்த மற்றொரு குழுவினர், தங்களுக்கு புதிய மதுக்கடை வேண்டும் என்று கோஷம் எழுப்பினர்.

இதனால் இந்த புதிய மதுக்கடை அத்தியாவசியமானது என்றும் தெரிவித்தனர்.

இவ்வாறு இரு குழுக்களும் மாறி மாறி கருத்து மோதலில் ஈடுபட்டதுடன், அது முறுகல் நிலை ஏற்பட்டதையடுத்தியது. உடனடியாக குறித்த இடத்துக்கு விரைந்த பொலிஸார் மோதலை கட்டுப்படுத்தியுள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்