எரிபொருளின் விலையில் மாற்றம்?

எரிபொருளின் விலையில் இன்று நள்ளிரவு முதல் மாற்றம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

மாதாந்த எரிபொருள் விலைத் திருத்தத்திற்கு அமைய இந்த திருத்தம் மேற்கொள்ளப்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், குறிப்பாக எரிபொருளின் விலை குறைக்கப்படலாம் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த மாதத்திற்கான எரிபொருள் விலைத் திருத்தம் கடந்த 31ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டது.

இதற்கமைய, ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை, 7 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 440 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டது.

அத்துடன், சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 72 ரூபாவினால் குறைக்கப்பட்டது.

இதன்படி சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 386 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டது.

அத்துடன், மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை, 12 ரூபாவினால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 245 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டது.

எவ்வாறாயினும், ஒக்டேன் 92 ரக பெற்றோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலையில் எவ்வித மாற்றங்களும் ஏற்படுத்தப்படவில்லை.

இதற்கமைய, ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்று 371 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதுடன், டீசல் லீற்றர் ஒன்று 363 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்