எதிர்வரும் வாரத்தில் இருந்து 10 மணித்தியாலங்கள் மின்வெட்டு?

மின் உற்பத்தி நிலையங்களுக்கு, மின் உற்பத்திக்கு தேவையான எரிபொருள் மற்றும் நீர் என்பன பற்றாக்குறையாக உள்ளமையின் காரணமாக, மின்வெட்டு நேரங்கள் நீடிக்கப்படக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

அதற்கமைய தற்போது அமுலாக்கப்படும் ஆறரை மணித்தியால மின்வெட்டு எதிர்வரும் வாரத்தில் இருந்து 10 மணித்தியாலங்கள் வரை நீடிக்கப்படக்கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.