இந்திய உயர்ஸ்தானியர் ஒலுவில் துறைமுகத்திற்கு விஜயம்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரஊப் ஹக்கீமினின் விசேட அழைப்பின் பேரில் இந்திய உயர்ஸ்தானியர் சந்தோஷ் ஜா நேற்று புதன் கிழமை ஒலுவில் துறைமுகத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.

ஒலுவில் துறைமுக விஜயத்தின் பின்னர் அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பணிப்பாளர் எம்.ஏ.சீ.ரியாஸ் தலைமையில் அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் கலந்துரையாடல் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் திகாமடுல்ல மாவட்ட பாாளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம், முன்னாள் பாாளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.மன்சூர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்