இந்தியாவின் புதிய ஜனாதிபதியாக பழங்குடியின பெண் தெரிவு

இந்தியாவின் புதிய ஜனாதிபதியாக முதன்முறையாக பழங்குடியின பெண் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள திரெளபதி முர்மு, இந்தியாவின் இரண்டாவது பெண் ஜனாதிபதி என்பதும் குறிப்பிடத்தக்கது.

தற்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம், அடுத்த மாதம் முடிவடையவுள்ள நிலையில் ஒடிசாவை சேர்ந்த திரெளபதி முர்மு ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்.