ஆணுறைக்கு அடிமையாகியுள்ள இளைஞர்கள் – அதிர்ச்சி தகவல்

உலகில் உள்ள மனிதர்கள் பல்வேறு விதமான பொருள்கள் மற்றும் பழக்கங்களுக்கு அடிமையாவது வழமை என்ற நிலையில், இந்தியாவின் ஒரு பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் திடீரென ஆணுறைக்கு அடிமையாகியுள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது

இந்திய மேற்கு வங்கம் மாநிலம் துர்காபூர் பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் நாள்தோறும் 3 அல்லது 4 பாக்கெட் ஆணுறைகளே விற்பனையாகி வந்த நிலையில், தற்போது ஒரே நாளில் 30 முதல் 40 ஆணுறை பாக்கெட்டுகள் விற்பனையாகி  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இப்பகுதியைச் சேர்ந்த கல்லூரி இளைஞர்கள் பலர் வரிசை கட்டி ஆணுறை பாக்கெட்டுகளை வாங்கி வர்த்தகரை திக்குமுக்காட வைத்துள்ளனர். இந்த திடீர் மாற்றம் தொடர்பாக இளைஞர்களிடமே வர்த்தக உரிமையாளர் காரணத்தை கேட்டுள்ளனர்.

இந்த இளைஞர்கள் ஆணுறைகளுக்கு நாங்கள் அடிமையாகியுள்ளோம் என, அதிர வைக்கும் தகவலை தெரிவித்துள்ளனர்.

இந்த விடயம் தொடர்பாக துர்காப்பூர் அரசு மருத்துமனையை சேர்ந்த வைத்தியர்கள் விளக்கம் அளிக்கையில் , தற்போது விற்பனையாகும் ஆணுறைகளில் வாசனைக்காக இரசாயனங்கள் சேர்க்கப்படுகின்றன. இவை மது (ஆல்கஹால்) வேதியல் தன்மைகளை கொண்டவையாகவுள்ளன.

இந்த ஆணுறைகளை சுடு நீரில் கலந்துவிடும் போது ஒருவித போதை உணர்வை தரும் என்பதால் இந்த வினோத போதை பழக்கத்திற்கு இளைஞர்கள் அடிமையாகியுள்ளனர் என தெரிவித்துள்ளனர்.