
நானுஓயாவிலிருந்து பதுளை நோக்கி புறப்பட ரயில் தடம் புரண்டு விபத்து
-நானுஓயா நிருபர்-
நானுஓயாவிலிருந்து பதுளை நோக்கி புறப்பட இருந்த ரயில் இன்று சனிக்கிழமை காலை நானுஓயாவில் தடம் புரண்டுள்ளது.
குறித்த புகையிரதம் நானுஓயாவிலிருந்து பதுளை நோக்கி புறப்பட இருந்த நிலையில் நானுஓயா புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் தடம்புரண்டுள்ளது.
குறித்த புகையிரதத்தில் பதுளை நோக்கிப் பயணம் மேற்கொள்ள வருகை தந்த பயணிகள் பாரிய சிரமங்களுக்கு உட்பட்டுள்ளனர்.
மேலும் குறித்த ரயிலில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் எல்ல நோக்கி செல்வதற்கு தயாராக இருந்ததுடன் அவர்கள் இரண்டு மணித்தியாலங்களுக்கு மேலாக காத்திருக்க நேரிட்டது.
மேலும் மிக விரைவில் புகையிரதம் திருத்தப்பட்டு பயணங்கள் வழமைக்குத் திரும்பவுள்ளதாக நானுஓயா புகையிரத நிலையத்தின் கட்டுப்பாட்டு நிலைய அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.