இலங்கைக்கு விதிக்கப்பட்டுள்ள கிரிக்கெட் தடை விரைவில் நீக்கம்

சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் இலங்கைக்கு விதிக்கப்பட்டுள்ள கிரிக்கெட் தடை எதிர்வரும் வாரத்திற்குள் முழுமையாக நீக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் புதிய விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தற்போது சர்வதேச கிரிக்கெட் பேரவையுடன் தடையை நீக்குவதற்கு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், கலந்துரையாடலுக்கு சாதகமான பதில் கிடைத்துள்ளதாகவும் கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் நிறைவேற்று சபைக்கு புதிய விளையாட்டு அமைச்சர் அழைப்பு விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்