பதில் ஜனாதிபதியாக பொறுப்பேற்றார் ரணில் விக்கிரமசிங்க

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பதில் ஜனாதிபதியாக நியமித்துள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனக்கு அறிவித்துள்ளார், என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறியுள்ளதால். அரசியலமைப்பின் 37(1) சரத்தின் படி ஜனாதிபதியின் பணிப்பின் அடிப்படையில், பிரதமர் பதில் ஜனாதிபதியாக  பொறுப்பேற்றுள்ளார்.

ஊடகங்களுக்கு விசேட அறிக்கையொன்றை வெளியிட்டு சபாநாயகர் இதனைத் தெரிவித்துள்ளார்.