அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் இணைப்பாளர வசந்த முதலிகே மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இன்று செவ்வாய்க்கிழமை கொழும்பு நீதவான் நீதிமன்றில் அவர் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, அவரை எதிர்வரும் ஜனவரி மாதம் 17 ஆம் திகதி வரை மீள விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
- Advertisement -
அன்றைய தினம், சந்தேகநபருக்கு எதிரான சாட்சியங்களின் சுருக்கத்தை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறும் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவுக்கு நீதவான் உத்தரவிட்டார்.
வசந்த முதலிகே, வண. கல்வெவ சிறிதம்ம தேரர் மற்றும் மற்றுமொரு செயற்பாட்டாளர் ஆகியோர் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டமைக்காக பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.
வண. கல்வெவ சிறிதம்ம தேரர் கடந்த நவம்பர் 23 ஆம் திகதி பிணையில் விடுவிக்கப்பட்டார், வசந்த முதலிகே 90 நாட்களுக்கும் மேலாக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
- Advertisement -