நவம்பரில் வெளிநாட்டு தொழிலாளர்கள் மூலம் 384.4 மில்லியன் டொலர்கள்

2022 நவம்பரில் வெளிநாட்டு தொழிலாளர்கள் 384.4 மில்லியன் டொலர்களை இலங்கைக்கு அனுப்பியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

தரவுகளின்படி,  2022 ஜனவரி முதல் நவம்பர் வரை,  வெளிநாட்டு தொழிலாளர்கள் 3,313.9 மில்லியன் டொலர்களை இலங்கைக்கு அனுப்பியுள்ளனர்.

கடந்த ஆண்டு நவம்பரில், வெளிநாட்டு தொழிலாளர்கள் 271.4 மில்லியன் அமெரிக்க டொலர்களை அனுப்பியுள்ளனர், இது 42 சதவீதம் அதிகமாகும் என்று மத்திய வங்கி தெரிவித்துள்ளது.