இன்று முதல் பல்கலைக்கழகங்களுக்கு பதிவு செய்ய முடியும்

2021 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சையில் தோற்றி பல்கலைக்கழகங்களுக்கு தெரிவான மாணவர்கள் இன்று திங்கட்கிழமை காலை முதல் பாடநெறிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு பதிவு செய்ய முடியும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஒதுக்கீடு ஆணைக்குழுவிடமிருந்து மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தி கிடைத்த பின்னர்,  www.ugc.ac.lk என்ற இணையத்தளத்திற்குச் சென்று தமது கற்கைநெறிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு பதிவு செய்ய முடியும் என அதன் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

2021 இல், 283,616 மாணவர்கள் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றினர், மேலும் 2021-2022 கல்வியாண்டில் 171,497 மாணவர்கள் பல்கலைக்கழக நுழைவுக்குத் தகுதி பெற்றனர்.