புதையல் தோண்டிய இருவர் கைது!

-பதுளை நிருபர்-

புதையல் தோண்டிய இருவரை கிராந்துருகோட்டை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கிராந்துருகோட்டை பகுதியில் தனி நபருக்கு சொந்தமான காணி ஒன்றில் புதையல் தோண்டுவதாக கிராந்துருகோட்டை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய, குறித்த பகுதியை சுற்றிவளைத்து தேடுதலை மேற்கொண்ட போது, புதையல் தோண்டி கொண்டிருந்த இருவரை  கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன், புதையல் தோண்டுவதற்கு பயன்படுத்த படும் உபகரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், இரு சந்தேக நபர்களையும் இன்று சனிக்கிழமை நீதவான் முன்னிலையில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணைகளை கிராந்துருகோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்