30.5 கிலோகிராம் கஞ்சாவுடன் இருவர் கைது

-வவுனியா நிருபர்-

 

வவுனியாவில் உள்ள பொலிஸ் விசேட புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் துரிதமாக செயல்பட்ட வவுனியா போதை ஒழிப்பு குற்றப்பிரிவினர், சூழ்ட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 30.5 கிலோகிராம் கஞ்சாவை கைப்பற்றியுள்ளனர்

இதன்போது, வடமராட்சி கிழக்கு பகுதியை சேர்ந்த 35,36 வயதுடைய இரண்டு நபர்களையும் கைது செய்துள்ளதுடன், கைது செய்யப்பட்ட நபர்களை மருதங்கேணி பொலிஸாரிடம் பாரப்படுத்துள்ளனர் .

வவுனியா தலைமை பொலிஸ் நிலையத்தின் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் றிஸ்வி தலைமையிலான குழுவினரே குறித்த கைது நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்