இரண்டு பேரூந்துகள் போட்டிக்கு ஓடியதில் ஓரு பேரூந்து வீதியை விட்டு கீழிறங்கி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இச்சம்பவம் வவுனியா – மன்னார் பிரதான வீதியில் சாம்பல்தோட்டம் பிள்ளையார் ஆலயத்திற்கு அருகே இன்று சனிக்கிழமை காலை இடம்பெற்றுள்ளது.
வவுனியாவிலிருந்து பூவரசங்குளம் வீதியூடாக செட்டிக்குளம் செல்லும் தனியார் பேரூந்தும், வவுனியாவிலிருந்து மன்னார் செல்லும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான இரு பேரூந்துகளும் போட்டிக்கு சென்றுள்ளன.
- Advertisement -
இதன் போது, குறித்த தனியார் பேரூந்து சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியினை விட்டு கீழிறங்கி விபத்துக்குள்ளானது.
இவ்விபத்தில் பயணிகளுக்கு எந்தவிதமான காயங்களும் ஏற்படவில்லை.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நெளுக்குளம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
- Advertisement -