கிங்ஸ்பரி ஹோட்டல் குண்டுத் தாக்குதல் : 8ஆவது சந்தேகநபருக்கு பிணை

2019 ஏப்ரல் 21 ஈஸ்டர் ஞாயிறு அன்று கொழும்பில் கிங்ஸ்பரி ஹோட்டலில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல் தொடர்பில் சுமார் 03 வருடங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ரிலா மர்ஷூக் என்ற 8ஆவது சந்தேகநபரை பிணையில் விடுவிக்குமாறு கோட்டை நீதவான் திலின கமகே உத்தரவிட்டுள்ளார்.

சந்தேகநபருக்கு பிணை வழங்குவதற்கு ஆட்சேபனை இல்லை என சட்டமா அதிபர் வழங்கிய பணிப்புரைக்கு அமைய நீதவான் பிணை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளார்.

இதன்படி, சந்தேகநபரை 05 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்குமாறு நீதவான் திலின கமகே உத்தரவிட்டார்.

மேலும், கிங்ஸ்பெரி ஹோட்டலில் தற்கொலை குண்டுத் தாக்குதலை நடத்தி உயிரிழந்த நபரின் மனைவியையும், மற்றுமொரு சந்தேகநபரையும் எதிர்வரும் 23ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.