பிறந்ததில் இருந்து கண்களை மூடாத அதிசய ஆட்டுக்குட்டி

-யாழ் நிருபர்-

யாழ்ப்பாணம், புத்தூர் – நவக்கிரி பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை ஆடு ஒன்று அதிசயம் மிக்க குட்டியை ஈன்றுள்ளது.

குறித்த ஆட்டுக் குட்டியின் நெற்றியில் இரண்டு கண்கள் இணைந்த நிலையில் காணப்படுகிறது. அத்துடன் அந்த ஆட்டுக் குட்டி கண்களை மூட முடியாத நிலையில் பிறந்ததில் இருந்து கண்களை திறந்தவாறே உள்ளது.

ஆட்டுக்குட்டி தாயில் பால் அருந்தவோ, எழுந்து நிற்கவோ முடியாத நிலையில் காணப்படுகிறது. பாலினை கறந்து ஊட்ட வேண்டிய தேவை உள்ளது. குட்டியின் உடல் மிகவும் நலிவுற்ற நிலையில் காணப்படுகிறது.

இந்த ஆட்டுக் குட்டியினை பலரும் பார்வையிட்டு வருகின்றனர்.