வீதிகள், வீடுகளில் மரங்கள் முறிந்து விழுந்து பாதிப்பு

-பதுளை நிருபர்-

பதுளை பசறை கோணக்கலை மேமலை தோட்டப் பிரிவில் பலத்த காற்றின் காரணமாக வீடொன்றின் மீது மரம் ஒன்று முறிந்து வீழ்ந்தமையினால் வீடு முற்றாக சேதமடைந்துள்ளது.

மரம் முறிந்து வீழ்ந்த வேளை வீட்டில் நால்வர் இருந்ததோடு எவருக்கும் எதுவித சேதமும் இல்லை. இருப்பினும் வீட்டிலிருந்த நால்வரும் அயலவர்களின் வீட்டில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்னர்.

மேலும், பிபிலகம, மீதும்பிடிய, வராதொல ஆகிய பகுதிகளில் வீட்டுக் கூரைகள் காற்றினால் சேதமடைந்துள்ளது.

இதேவேளை, பசறை பண்டாரவளை வீதியில் நமுனுகுலை 12 ம் கட்டைப் பகுதியில் பாரிய காற்றின் காரணமாக வீதியோரங்களில் உள்ள மரங்கள் முறிந்து வீதியில் வீழ்ந்தமையினால் வீதி போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளது.

மேலும், பசறை பண்டாரவளை வீதியில் அம்பலம் பகுதியில் பாரிய மரம் ஒன்று வீதியில் குறுக்கே வீழ்ந்துள்ளதால் அப்பகுதியிலும் வீதி போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்