மட்டு:களுவாஞ்சிக்குடியில் மாணவர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் நிகழ்வு

-கல்முனை நிருபர்-

மட்டக்களப்பு – களுவாஞ்சிகுடி பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் பாடசாலை மாணவர்களுக்கான கருப்பை கழுத்து புற்று நோயை தடுப்பதற்கான தடுப்பூசி மற்றும் ஏற்புவலி, தொண்டைக் கரப்பான் நோய்களை தடுப்பதற்கான (ஏ.ரி.டீ) தடுப்பூசி ஆகியன ஏற்றும் செயல்திட்டம் சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஏ.உதயசூரிய வழிகாட்டலில் மேற்பார்வை பொதுச்சுகாதார பரிசோதகர் எஸ்.யோகேஸ்வரன் ஒழுங்கமைப்பில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதற்கமைய பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட கோட்டைக்கல்லாறு மகா வித்தியாலயத்தில் தரம்-6 இல் கல்வி கற்கும் மாணவிகளுக்கு கருப்பை கழுத்து புற்று நோய் தடுப்பூசி ஏற்றப்பட்டது.அத்துடன் ஏ.ரி.டி தடுப்பூசியும் ஏற்றப்பட்டன.

இதில் பொதுச்சுகாதார பரிசோதகர் கஜானணன் உட்பட குடும்பநல உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

மட்டுகளுவாஞ்சிக்குடியில் மாணவர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் நிகழ்வு  மட்டுகளுவாஞ்சிக்குடியில் மாணவர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் நிகழ்வு 

மட்டுகளுவாஞ்சிக்குடியில் மாணவர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் நிகழ்வு

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்