வைத்தியர்கள் சேவை புறக்கணிப்பு : நோயாளர்கள் பாதிப்பு
-கிளிநொச்சி நிருபர்-
கிளிநொச்சி வைத்தியசாலையில் வைத்தியர்கள் சேவை புறக்கணிப்பில் ஈடுபட்டமையால் நோயாளர்கள் பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ளனர்.
இன்று செவ்வாய்க்கிழமை வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு, மாதாந்த சிகிச்சைகள் இடம்பெறவில்லை.
அத்தியாவசிய சிகிச்சைகள் மற்றும் அவசர சிகிச்சைகள் மாத்திரம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதனால் சிகிச்சைக்காக வருகை தந்த மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றதுடன், அரசாங்கத்தை கடுமையாக சாடியமை குறிப்பிடத்தக்கது.