அஞ்சல் வாக்களிப்புக்கு புதிய திகதி

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கான திகதி அறிவிக்கப்பட்ட நிலையில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் அஞ்சல் மூல வாக்குகளுக்கான நிதி திறைசேரியில் இருந்து எதிர்வரும் புதன்கிழமைக்குள் (15) 500 மில்லியன் கிடைக்காவிட்டால் இதற்கான புதிய திகதியை அறிவிக்க நேரிடும் என தெரிவித்துள்ளார்.

அத்துடன் அஞ்சல் மூல வாக்களிப்புக்களுக்கு எதிர்வரும் 28 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதிவரை காலம் குறிக்கப்பட்டுள்ளது.

அரசாங்க அச்சகப் பணிப்பாளர் கங்காணி லியனகேயும் அஞ்சல் வாக்குகளை அச்சிடுவதற்கு போதிய அவகாசம் இல்லை என தெரிவித்துள்ளார் .

இந்நிலையில் தேர்தல் ஆயத்தப் பணிகளை மேற்கொள்வதற்கு இந்த மாத இறுதிவரை திறைசேரியிலிருந்து மொத்தம் 1,100 மில்லியன் ரூபா தேவைப்படுவதாக ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா கூறியுள்ளார்.

இதேவேளை மார்ச் 20 திங்கட்கிழமைக்குள் பணம் கிடைக்காவிட்டால், தாம் நீதிமன்றத்திற்கு சென்று தமக்கான நிதியை திறைசேரி ஒதுக்கீடு செய்யாதது குறித்து முறையிட வேண்டும் என்றும் அத்தோடு, இது சம்பந்தமாக திறைசேரியுடன் பேச்சுவார்த்தை நடத்தும் திட்டம் இல்லை என தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் அச்சிடும் பணிக்காக 533 மில்லியன் ரூபாய் கோரப்பட்ட போதிலும், 339 மில்லியன் ரூபாய் இன்னும் நிலுவையில் உள்ளதாகவும், அதனால் அச்சடிக்கும் பணியை முன்னெடுக்க முடியவில்லை என்று அரச அச்சக பணிப்பாளர் கங்கானி லியனகே தெரிவித்துள்ளார்.

தேர்தல் தொடர்பான 2,500 அச்சுப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டிய நிலையில், இதுவரை 54 பணிகள் மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்