உழவு இயந்திர விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

உழவு இயந்திர விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
மட்டக்களப்பு ஆயித்தியமலை வயல் பகுதியில் உழவு இயந்திரத்தில் வயலை உழுது கொண்டிருந்த போது உழவு இயந்திரம் தலைகீழாக கவிழ்ந்ததில் அதனை செலுத்திய சாரதி உயிரிழந்த சம்பவம் நேற்று சனிக்கிழமை பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக ஆயித்தியமலை பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த நபர் வயலில் நேற்று சனிக்கிழமை பிற்பகல் உழவு  நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது வயலில் உழவு இயந்திரத்தின் பின்பக்க டயர்கள் புதைந்ததையடுத்து உழவு இயந்திர முன்பகுதி மேல் எழுந்து தலைகீழாக கவிழ்ந்ததில் அவர் கீழே விழுந்ததில் கலப்பையில் தலை அடிபட்டு சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளார்.
பொலிஸார் அவரை  மீட்டு பிரேத பரிசோதனைக்காக மட்டு போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆயித்தியமலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்