“அவள் தேசத்தின் பெருமைக்குரியவள்”

25

மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அமைச்சினால் “அவள் தேசத்தின் பெருமைக்குரியவள்” எனும் தொனிப்பொருளில் சர்வதேச மகளிர் தினத்தில் மாண்புமிகு ஜனாதிபதி அவர்களின் தலைமையில் பத்தரமுல்லையில் உள்ள Water Edge Hotel இல் நேற்று புதன்கிழமை (08) நடைபெற்றது.

பல்வேறு துறைகளில் சாதனைகள் பல புரிந்த பெண்கள் இதில் கௌரவிக்கப்பட்டனர். அவ்வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் சிறந்த தொழில் முயற்சியாளருக்கான கௌரவ விருதை காத்தான்குடி பிரதேச செயலக பிரிவைச் சேர்ந்த திருமதி.பாத்திமா பஹீமா சுக்ரி பெற்றுக்கொண்டார்.

இவ்விருதினை பெறுவதற்கு காத்தான்குடி பிரதேச செயலாளர் திரு.உ.உதயசிறிதர்,  உதவி பிரதேச செயலாளர் திருமதி.சில்மியா, மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கைத்தொழில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மற்றும் அபிவிருத்தி இணைப்பாளர்கள் ஆகியோர் ஊக்குவித்ததாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

Sureshkumar
Srinath