கொழும்பு கண்டி பிரதான வீதியில் பேருந்து விபத்து ஒருவர் பலி
கொழும்பு – கண்டி பிரதான வீதியில் மாவனல்லை – கணேதன்ன பகுதியில் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதன் போது ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.
நீர்கொழும்பில் இருந்து கண்டி நோக்கி பயணித்த தனியார் பயணிகள் பேருந்து ஒன்றும் கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்து ஒன்றும் மோதிக்கொண்டதில் இந்த விபத்து நேர்ந்துள்ளதுள்ளதாகவும் இதன் போது 59 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 23 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மாவனல்லை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்


