திலினி பிரியமாலியின் வீட்டில் நான்கரை இலட்சம் மின்கட்டணம் நிலுவை

பாரிய நிதி மோசடியில் ஈடுபட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலியின் வீட்டில் நேற்று வெள்ளிக்கிழமை முதல் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

4 மாதங்களாக நிலுவையில் உள்ள மின்கட்டணத்தை செலுத்தாததே இதற்கு காரணம் என செய்திகள் தெரிவிக்கின்றன.

குறித்த மின் கட்டணம் தொடர்பான தொகை கிட்டத்தட்ட நான்கரை இலட்சம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

வத்தளையில் திலினி பிரியமாலி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் வாடகை அடிப்படையில் வசித்து வந்த வீட்டில் மின்சாரமே இவ்வாறு துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.