மொறட்டுவை பல்கலைக்கழகம் 21ஆம் திகதி வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
பல்கலைக்கழகத்திற்குள் டெங்கு தொற்று பரவி வருவதன் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும் இதுவரை பல்கலைக்கழகத்திற்குள் 50க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.