இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில், இலங்கையில் பதிவாகியுள்ள மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 62,000-ஐத் தாண்டியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஜூலை மாதத்தில் மட்டும் 7,038 நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக அந்தப் பிரிவின் பதில் பணிப்பாளர் வைத்தியர் கபில கன்னங்கர தெரிவித்தார்.
பதிவாகியுள்ள மொத்த நோயாளர்களில் அதிகப்படியானோர், அதாவது 52.40 சதவீதத்தினர் மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என்பதுடன், கொழும்பு மாவட்டத்தில் 12,663 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
அத்துடன், கம்பஹா மாவட்டத்தில் 12,582 நோயாளர்களும், களுத்துறை மாவட்டத்தில் 4,191 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.