உலகக் கிண்ண கால்பந்தாட்ட தொடரின் ‘எப்’ குழுவுக்கான லீக் ஆட்டத்தில் ஜப்பான் மற்றும் சுவீடன் அணிகள் மோதிய போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் நிறைவடைந்துள்ளது.
இன்று காலை 4.30 மணிக்கு ஆரம்பமான இந்த போட்டியில் தொடக்கம் முதலே இரு அணிகளும் சமபலத்துடன் விளையாடின.
இதனால் முதல் பாதி முழுவதும் எந்த அணியாலும் கோல் அடிக்க முடியவில்லை.
இடைவேளைக்குப் பிறகு தாக்குதல் ஆட்டத்தை தீவிரப்படுத்திய ஜப்பான், 56-வது நிமிடத்தில் முதல் கோலை அடித்து 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
இதற்கு பதிலடி கொடுத்த சுவீடன், 62-வது நிமிடத்தில் கோல் அடித்து ஆட்டத்தை 1-1 என சமநிலைக்கு கொண்டு வந்தது.
அதன்பிறகு வெற்றிக்கான 2-வது கோலை அடிக்க இரு அணி வீரர்களும் கடுமையாக போராடினர்.
இருப்பினும் கடைசி வரை எந்த அணியாலும் கோல் அடிக்க முடியாமை போனதால், போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் நிறைவடைந்தது.