காதலை ஏற்க மறுத்த பெண்: வன்கொடுமை செய்து முகத்தில் தன் பெயரை எழுதி சூடு வைத்த இளைஞன்

இந்தியாவில் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து, சூடான இரும்பு கம்பியால் தனது பெயரை அவரின் முகத்தில் எழுதி சித்ரவதை செய்த இளைஞரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

உத்தரபிரதேச மாநிலம் கெரி பகுதியை சேர்ந்தவர் அமன் ஹூசன் என்ற இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

அமன் ஹூசன் அப்பகுதியை சேர்ந்த இளம் பெண்ணிடம், தனது காதலைத் தெரிவித்துள்ளார். எனினும் காதலை ஏற்க மறுத்த பெண்ணிடம், அவரைத் திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக தொடர்ந்து வற்புறுத்தியுள்ளார். அமன் ஹூசைனின் நடத்தை பிடிக்காததால், அப்பெண் திருமணத்திற்கு மறுத்துள்ளார்.

இதனால் பெண்ணின் மீது கோபத்தில் இருந்து வந்துள்ள ஹூசன், வீட்டில் தனியாக இருந்த பெண்ணைக் கடத்தி சென்று, ஆள் நடமாட்டம் இல்லாத வீட்டில் பெண்ணின் கை, கால்களை கயிற்றால் கட்டி வைத்து கொடுமைப்படுத்தியுள்ளார்.

அதன் பின்னர், இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து,  சூடான இரும்பு கம்பியால், அவரது முகத்தில் சூடு வைத்து, தனது பெயரை ஹூசன் என்று எழுதி சித்ரவதை செய்துள்ளார்.

இதையடுத்து, அவரிடம் இருந்து தப்பித்து வந்த இளம் பெண், தனது பெற்றோரின் உதவியுடன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

முறைப்பாட்டின் அடிப்படையில் குறித்த நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தற்போது மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்