நிதியமைச்சின் நாடளாவிய ரீதியிலான நிகழ்ச்சி திட்டம்

வரி செலுத்தும் மக்களை ஊக்குவிக்கும் வகையில், “வரி செலுத்தும் ஊக்கமளிக்கும் மக்கள்” என்ற பெயரில் நாடளாவிய ரீதியில் தொடர் நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, முதலாவது நிகழ்வு எதிர்வரும் 23ஆம் திகதி கொழும்பில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

அதனைத் தொடர்ந்து, அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கியதாக இந்நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக நிதியமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.