மதுபான விலை உயர்வால் எதிர்நோக்கியுள்ள சிக்கல்

மதுபான விற்பனை சுமார் 40 சதவீதம் குறைந்துள்ளதாக கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனால், கலால் வரி மூலம் அரசு எதிர்பார்க்கும் வருவாயை பெற முடியாது என கலால் ஆணையர் நாயகம் எம்.ஜே.குணசிறி தெரிவித்துள்ளார்

மதுபானத்தின் விலை உயர்வால் மது பாவனையாளர்கள் சட்டவிரோத மதுபானத்தை பயன்படுத்தத் தூண்டப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.