தொழிலாளர் நலன் குறித்து கலந்துரையாடல்

-பதுளை நிருபர்-

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் சர்வதேச தொழிலாளர் அமைப்பின் மூத்த சமூகப் பாதுகாப்பு நிபுணர் மரிக்கோ ஓச்க்கும் (Mariko Ouch) இடையிலான கலந்துரையாடலொன்று சௌமிய பவனில் நடைபெற்றது.

இக்கலந்துரையாடலில் தொழிலாளர் நலன் குறித்து இரு தரப்பினருக்கும் இடையே பல்வேறு கருத்துக்கள் பரிமாறப்பட்டன.

தனியார் நிறுவனங்களில் தொழிலாளர்களுக்கான உரிமைகள் வழங்கப்படாமல் அடிமைத்தனப்படுத்துவது தொடர்பாக இதன்போது இ.தொ.கா சுட்டிக்காட்டியது.

இது குறித்து சர்வதேச தொழிலாளர் அமைப்பு கவனம் செலுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

தொழிலாளர் நலன் குறித்து கலந்துரையாடல்