நுவரெலியாவில் பெண் உடலியல் சிகிச்சை நிபுணர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பிரதான சந்தேகநபர் உள்ளிட்ட நான்கு சந்தேகநபர்களை எதிர்வரும் ஜூலை 30ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நுவரெலியா நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர்கள் நேற்று வியாழக்கிழமை சிறைச்சாலை அதிகாரிகளினால் நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
நுவரெலியா நீதவான் புஷ்பிகா ஜயதாச முன்னிலையில் இந்த வழக்கு பரிசீலிக்கப்பட்டதன் பின்னரே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்களில் குறித்த கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேகநபர், அவரது மனைவி, சந்தேகநபருக்கு உதவிகளை வழங்கிய குற்றச்சாட்டின் கீழ் குண்டசாலை பிரதேச சபையின் சாரதியும், மெனிக்ஹின்ன பொலிஸ் நிலையத்தின் முன்னாள் பொறுப்பதிகாரியாகக் கடமையாற்றிய பிரதான பொலிஸ் பரிசோதகரும் அடங்குகின்றனர்.