நாட்டில் இதுவரை டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன் நாட்டில் இதுவரையான காலப்பகுதியில் பதிவாகிய டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 73,455 ஆக அதிகரித்துள்ளது.
தொடர்ச்சியாகக் காய்ச்சல் அல்லது அறிகுறிகள் தென்படுமாயின், உடனடியாக அருகிலுள்ள வைத்தியசாலைக்கு சென்று முறையான மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.